எப்போது தேர்தல்? - 17ஆம் திகதி கூட்டத்தில் முடிவு!

ஆசிரியர் - Admin
எப்போது தேர்தல்? - 17ஆம் திகதி கூட்டத்தில் முடிவு!

உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்குத் தெரி­வு ­செய்­யப்­ப­ட­வுள்ள உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை மற்றும் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் எண்­ணிக்கை அடங்­கிய 2043/56 மற்றும் 57 என்ற இலக்­கங்­களையுடைய வர்த்­த­மானி அறி­வித்தல் நேற்று வெளி­யி­டப்­பட்­டுள்­ள­தாக அர­சாங்க அச்­சுத்­தி­ணைக்­க­ளத்தின் பிர­தானி கங்­காணி கல்­பனி தெரி­வித்தார்.

எனவே வர்த்­த­மானி அறி­வித்தல் வெளி­யி­டப்­பட்ட பின்னர் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் நடத்தும் திக­தி­யினை அறி­விக்கும் பொறுப்பு சுயா­தீன தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு­வுக்குச் செல்­கி­றது. அதற்­கி­ணங்க எதிர்­வரும் 17 ஆம் திகதி கூட­வுள்ள சுயா­தீன தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் கூட்­டத்­தின்­போது தேர்தல் நடை­பெறும் திகதி பற்­றிய இறுதித் தீர்­மானம் எடுக்­க­வுள்­ள­தாக சுயா­தீன தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேஷப்­பி­ரிய தெரி­வித்தார்.

இதே­வேளை எதிர்­வரும் ஜன­வரி மாதம் 20 ஆம் திகதி முதல் 31 ஆம் திக­திக்குள் ஒரு தினத்தில் உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்­தலை நடத்­து­வ­தற்கு எதிர்­பார்ப்­ப­தாக அவர் ஏற்­க­னவே தெரி­வித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் பத­விக்­காலம் நிறை­வ­டைந்து இரு வரு­டங்கள் கடந்­துள்ள நிலையில், எல்லை நிர்­ணயம் உள்­ளிட்ட கார­ணங்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு தேர்தல் பிற்­போ­டப்­பட்டு வந்­தது. எனினும் அதற்­கான பணிகள் நிறை­வு­செய்­யப்­பட்­ட­துடன் கடந்த முதலாம் திகதி குறித்த வர்த்­த­மா­னியில் மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்­சி­மன்ற அமைச்சர் பைஸர் முஸ்­தபா கைச்­சாத்­திட்டு அர­சாங்க அச்­சகத் திணைக்­க­ளத்­திற்கு அனுப்­பி­வைத்தார். எனவே ஒன்­பது நாட்கள் கடந்­துள்ள நிலையில் நேற்­றைய தினமே அவ்­வர்த்­த­மானி வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

ஆகவே வெளி­யி­டப்­பட்­டுள்ள உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்தல் குறித்த வர்த்­த­மா­னியில் நான்­கா­யி­ரத்து எண்­ணூற்று நாற்­பது தொகு­திகள் வகுக்­கப்­பட்­டுள்­ள­துடன் 341 உள்­ளூ­ராட்­சி­மன்­றங்கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. அவ்­வுள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்கு எண்­ணா­யி­ரத்து முன்­னூற்று ஐம்­பத்­தாறு உறுப்­பி­னர்கள் தெரி­வு­செய்­யப்­ப­ட­வுள்­ளனர்.

இதே­வேளை இறு­தி­யாக விகி­தா­சார முறையில் நடை­பெற்ற உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலின் போது நாட்டில் முன்­னூற்று முப்­பத்­தைந்து உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் இருந்­த­துடன் அம்­மன்­றங்­க­ளுக்கு நான்­கா­யி­ரத்து நானூற்று எண்­பத்­தாறு உறுப்­பி­னர்கள் தெரி­வு­செய்­யப்­பட்­டனர்.

ஆகவே புதிய தேர்தல் முறை­யூ­டாக நடை­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் கடந்த தேர்­த­லை­விட ஆறு உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் மேல­தி­க­மாக உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன. அதற்­கி­ணங்க அக்­க­ர­பத்­தனை, கொட்­ட­கலை, மஸ்­கெ­லியா, நோர்வூட், பொல­ந­றுவை ஆகிய பிர­தேச சபை­களும் பொல­ந­றுவை மாந­கர சபை­யுமே புதிய உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

எனினும் சாய்ந்­த­ம­ரு­துக்கு தனி­யான பிர­தேச சபை தொடர்­பி­லான கலந்­து­ரை­யா­டல்கள் நடைபெற்ற போதிலும் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியில் அவ்வாறானதொரு பிரதேச சபை உருவாக்கப்படவில்லை. எனவே கல்முனை மாநகர சபையில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தவில்லை. ஆகவே தற்போது நாட்டில் மொத்தமாக இருநூற்று எழுபத்தாறு பிரதேச சபைகளும், 24 மாநகர சபைகளும், நாற்பத்தொரு நகரசபைகளுமாக பிரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு