தெற்கு மீனவர்கள் வடக்கிற்கு வருதற்கு உரிமை உள்ளது..

ஆசிரியர் - Editor I
தெற்கு மீனவர்கள் வடக்கிற்கு வருதற்கு உரிமை உள்ளது..

வடக்கிலிருந்து மீனவர்கள் தெற்கிற்கு போவதற்கும், தெற்கிலிருந்து மீனவர்கள் வடக்கிற்கு வருவதற்கும் இந்த நாட்டில் உரிமை உள்ளது. அதனை தமிழ்தேசிய கூட்டமைப்பினர் இனவ hதத்திற்காக பயன்படுத்த நாங்கள் இடமளிக்க மாட்டோம். 

மேற்கண்டவாறு ஜே.வி.பி.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிஹால் ஹலப்பதி கூறியுள்ளார். இன்று யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற வடக்கு மீனவர்கள் பிரச்சினை குறித்த ஊ டகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

இதன்போது மேலும் அவர் கூறியுள்ளதாவது, நாங்கள் இனவாதத்திற்கு எதிரானவர்கள். சட்டவிரோதமான தொழிலை செய்பவர்கள் எந்த இனம் சார்ந்தவராக இருந்தாலும் பிழையா னதே. ஆனால் பருவகால கடற்றொழிலுக்காக தெற்கில் இருந்து 

வடக்கிற்கு மீனவர்கள் வருவதும், வடக்கிலிருந்து தெற்கிற்கு மீனவர்கள் செல்வதும் வழமை. இந்த நாட்டில் அதற்கு உரிமை உள்ளது. அதனை கடந்தகால அரசியல் த லமைகள் சரியா க விளங்கிக் கொள்ளாமையினாலேயே இன்று இந்த பிரச்சினை தலைதூக்கியுள்ளது. 

இதனை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்க ளான எம்.ஏ.சுமந்திரன், சாள்ஸ் நிர்மலநாதன், சிவநேசன் போன்றவர்களும், மாகாணசபை உ றுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் போன்றவர்களும் இனவாதமாக பார்த்தால், 

அல்லது இனவாதத்திற்காக பயன்படுத்தினால் அதனை நாங்கள் ஏற்கப்போவதில்லை. அதற்கு நாங்கள் இடமளிக்கப்போவதில்லை என்றார்.  

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு