நண்பர்களுடன் மதுபானம் அருந்திக் கொண்டிருந்த 21 வயதான இளைஞன் பலி!

ஆசிரியர் - Editor I
நண்பர்களுடன் மதுபானம் அருந்திக் கொண்டிருந்த 21 வயதான இளைஞன் பலி!

குருணாகல் - பிங்கிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  திகன்வெல பகுதியில் மதுபானம் அருந்திகொண்டிருந்த ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பிங்கிரிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் குருணாகல், வெல்லவ பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஆவார்.

இவர் சக நண்பர்களுடன் மது அருந்திகொண்டிருந்தபோது திடீர் சுகயீனம் காரணமாக பிங்கிரிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிங்கிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு