சுட்டுக் கொல்லப்பட்ட 6 வயது சிறுமியின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது!

ஆசிரியர் - Editor I
சுட்டுக் கொல்லப்பட்ட 6 வயது சிறுமியின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது!

கொழும்பு - மருதானை, சரத் பொன்சேகா மாவத்தையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்ட 6 வயது சிறுமியின் சடலம் கொட்டாஞ்சேனை இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் எவரையும் பொலிஸாரால் இதுவரை கைது செய்ய முடியவில்லை.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மருதானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சரத் பொன்சேகா மாவத்தையில் கொலைக்குற்றச்சாட்டுக்கு உள்ளான 36 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

ஆனால் துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் காயமடைந்துள்ளதுடன், எதிர்பாராதவிதமாக அவரது 6 வயது மகளும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார்.

சிறுமி உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் மார்பில் துப்பாக்கிச் சூடு பதிவான காரணமாக துரதிஷ்டவசமாக  உயிரிழந்துள்ளார்.

அபிமானி தெருவந்திகா என்ற 6 வயது சிறுமியே உயிரிழந்துள்ளார். பிரேத பரிசோதனைக்கு பின், சிறுமியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

நேற்று (18) நள்ளிரவு கொட்டாஞ்சேனையில் உள்ள வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட அவரது சடலம் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

சிறுமியின் சடலத்தின் இறுதிக் கிரியைகள் நாளை மறுநாள் பிற்பகல் மாதம்பிட்டிய பொது மயானத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு