யாழ்.திருநெல்வேலியில் உள்ள விடுதி ஒன்றில் சிறுமியின் சடலம் மீட்பு!

ஆசிரியர் - Editor I
யாழ்.திருநெல்வேலியில் உள்ள விடுதி ஒன்றில் சிறுமியின் சடலம் மீட்பு!

யாழ்.திருநெல்வேலிப் பகுதியில் உள்ள தனியார் விடுதியொன்றிலிருந்து  இன்று மதியம்  சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் யாழ்.மாவட்ட நீதவான் நேரில் சென்று பார்வையிட்டார். உயிரிழந்த சிறுமி திருகோணமலையைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சிறுமியுடன் அறையில் தங்கியிருந்த பேத்தியார் மயக்க நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு  கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

மேலும் சிறுமி 3 நாட்களுக்கு முன்னரே இறந்து விட்டார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது,

இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு