யாழ்.இருபாலை சிறுவர் இல்லம் முற்றுகையிடப்பட்டதன் எதிரொலி, வடமாகாணத்திலுள்ள சகல சிறுவர் இல்லங்கள், பராமரிப்பு நிலையங்களினதும் தகவல்களை திரட்ட பணிப்பு...

ஆசிரியர் - Editor I
யாழ்.இருபாலை சிறுவர் இல்லம் முற்றுகையிடப்பட்டதன் எதிரொலி, வடமாகாணத்திலுள்ள சகல சிறுவர் இல்லங்கள், பராமரிப்பு நிலையங்களினதும் தகவல்களை திரட்ட பணிப்பு...

வடமாகாணத்தில் இயங்கும் சிறுவர் பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி நிலையங்கள் தொடர்பில் கிராம சேவையாளர் ஊடாகத் தகவல்களை சேகரிக்கும்படி சகல பிரதேச செயலாளர்களுக்கும் வடமாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் இராஜேந்திரம் குருபரன் அறிவித்துள்ளார்.

பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்ற சிறுவர் அபிவிருத்தி நிலையங்கள், தற்காலிகமாக அனுமதி வழங்கப்பட்ட பகல் பராமரிப்பு நிலையங்கள், தற்காலிகமாக அனுமதி வழங்கப்பட்ட விடுதிகள் ஆகியவற்றின் விபரம் பிரதேச செயலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கிராம அலுவலர் பிரிவுகளில் இயங்கும் சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் ஏதாவது சிறுவர்கள் தங்கவைக்கப்பட்டிருந்தால் அந்த நிலையத்தில் தங்கவைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் சிறுவர்கள் தொடர்பாகவும், அதன் நிர்வாகம் தொடர்பாகவும் கிராம அலுவலர் மூலமான விவரங்களைப் பெற்று 

அனுப்பிவைக்குமாறு பணிப்பாளரால் பிரதேச செயலாளர்ககளுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு