யாழ்.தாவடியில் வீடொன்றுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய வன்முறை குழுவை சேர்ந்த ஒருவர் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.தாவடியில் வீடொன்றுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய வன்முறை குழுவை சேர்ந்த ஒருவர் கைது!

யாழ்.தாவடி பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தியதுடன், மோட்டார் சைக்கிளை தீ வைத்துக் கொழுத்திய சம்பவம் தொடர்பில் வன்முறை குழுவை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

மேற்படி தாக்குதல் சம்பவம் கடந்த 25 ஆம் திகதி இரவு 10 மணியளவில் இடம்பெற்றது. சுமார் ஆறு பேர் கொண்ட குழுவினர் வீட்டினை சேதப்படுத்தியதோடு வீட்டில் நின்ற மோட்டார் சைக்கிளை எரியூட்டிவிட்டு தப்பிச் சென்றிருந்தனர். 

இச் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட யாழ்.மாவட்ட பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் மாவட்ட புலனாய்வு பிரிவினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு 

தாக்குதலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டு சுன்னாகம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு