போதைப் பொருள் பாவனை தொடர்பில் விழிப்புணர்வூட்டும் பேரணி, யாழ்.போதனா வைத்தியசாலை ஒழுங்கமைப்பில்!

ஆசிரியர் - Editor I
போதைப் பொருள் பாவனை தொடர்பில் விழிப்புணர்வூட்டும் பேரணி, யாழ்.போதனா வைத்தியசாலை ஒழுங்கமைப்பில்!

யாழ்.மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை தொடர்பான விழிப்புணர்வை உண்டாக்கும் வகையில் யாழ்.போதனா வைத்தியசாலை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் பேரணியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலை முன்றலில் நாளை வியாழக்கிழமை (29) மதியம்12 மணியளவில் இந்த பேரணி ஆரம்பித்து மணிக்கூட்டு கோபுர வீதியூடாக, யாழ் பொலிஸ் நிலையத்தைஅடைந்து அங்கிருந்து பிரதான வீதியூடாக யாழ்.மாவட்ட செயலகத்தை அடையவுள்ளதுடன் 

மாவட்ட செயலரிடம் மகஜரும் கையளிக்கப்படவுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேய இது தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு