யாழ்.சாவகச்சோி ஆதார வைத்தியசாலை தாதிய பரிபாலகர் மோசடியான விதத்தில் சம்பளம் பெற்றாரா? விசாரணை அறிக்கை கொழும்புக்கு..

ஆசிரியர் - Editor I
யாழ்.சாவகச்சோி ஆதார வைத்தியசாலை தாதிய பரிபாலகர் மோசடியான விதத்தில் சம்பளம் பெற்றாரா? விசாரணை அறிக்கை கொழும்புக்கு..

யாழ்.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் தாதிய பரிபாலகர் மோசடியான விதத்தில் தனது அரச சம்பளத்தை பெற்றதான குற்றச்சாட்டு தொடர்பில் கணக்காய்வு விசாரணை அறிக்கை கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த வைத்தியசாலைகள் கடமையாற்றும் தாதிய பரிபாலகர் ஒருவர் கடமைக்கு சமூகமளிக்காத நாட்களுக்கு அரச சம்பளத்தை பெற்றமை மற்றும் முறைகேடாகவிதத்தில் 

தனது சமூகமாளிக்காத நாட்களுக்கு கையெழுத்தை வைத்தமை தொடர்பான விசாரணை மாகாண உள்ளக கணக்காய்வு திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டது. இதன் அடிப்படையில் குறித்த விசாரணை அறிக்கை 

மத்திய சுகாதார அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அறியக் கிடைத்தது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு