யாழ்.பலாலி - அன்ரனிபுரத்தில் அதிகாலை 2 மணிக்கு ஹயஸ் வாகனம் ஒன்றை மடக்கிய கடற்படையினர், இருவர் கைது..!

ஆசிரியர் - Editor I
யாழ்.பலாலி - அன்ரனிபுரத்தில் அதிகாலை 2 மணிக்கு ஹயஸ் வாகனம் ஒன்றை மடக்கிய கடற்படையினர், இருவர் கைது..!

சுமார் 100 கிலோ வரையான கஞ்சாவுடன் ஹயஸ் வாகனம் ஒன்றை கைப்பற்றியுள்ள கடற்படையினர் வாகனத்தில் பயணித்த இருவரை கைது செய்து அச்சுவேலி பொலிஸாரிடம் கையளித்துள்ளனர். 

குறித்த சம்பவம் இன்று அதிகாலை 2 மணியளவில் பலாலி - அன்ரனிபுரம் பகதியில் இடம்பெற்றிருக்கின்றது. ஹயஸ் வாகனத்தில் இருந்த மானிப்பாய் மற்றும் மன்னார் பகுதியைச் சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 

ஹயஸ் வாகனமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. அச்சுவேலி பொலிசார் இது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் 100 கிலோ வரையான கஞ்சா மீட்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு