போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இளைஞன் யாழ்.கோண்டாவில் புகைரத நிலையத்தில் கைது..!

ஆசிரியர் - Editor I
போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இளைஞன் யாழ்.கோண்டாவில் புகைரத நிலையத்தில் கைது..!

போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டில் யாழ்.கோண்டாவில் புகைரத நிலையத்தில் வைத்து 27 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். 

இன்று கோண்டாவில் ரயில் நிலையத்தில் வைத்து அதே இடத்தைச் சேர்ந்த 27 வயதுடையவரே கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் கூறினர்.

சந்தேக நபரிடமிருந்து 5 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் வியாபாரத்தில் பெற்றுக்கொண்ட 75 ஆயிரம் ரூபாய் பணம் 

ஆயின கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். யாழ்.பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும்

 தலைமை பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்சிஸ் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரே இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்யும் முதன்மை சந்தேக நபரே நீண்ட நாள்கள் தேடப்பட்டு வந்தவரே கைது செய்யப்பட்டுள்ளார் .

என்றும் பொலிஸார் கூறினர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு