அதிகாலையில் வீடொன்றுக்குள் நுழைந்த வாள்வெட்டு கும்பல் மோட்டார் சைக்கிளுக்கு தீவைத்து, வீட்டை உடைத்து அட்டகாசம்! யாழ்.மானிப்பாயில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
அதிகாலையில் வீடொன்றுக்குள் நுழைந்த வாள்வெட்டு கும்பல் மோட்டார் சைக்கிளுக்கு தீவைத்து, வீட்டை உடைத்து அட்டகாசம்! யாழ்.மானிப்பாயில் சம்பவம்..

யாழ்.மானிப்பாய் இந்துக்கல்லுாரிக்கு அருகில் உள்ள வீடொன்றுக்குள் இன்று அதிகாலை 2 மணியளவில் புகுந்த வன்முறைக் கும்பல் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியுள்ளதுடன், 

வீட்டின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை தீ வைத்துக் கொழுத்திவிட்டு வீட்டின் மீது பெற்றோல் குண்டு தாக்குதலையும் நடத்தியுள்ளது. 

இந்த சம்பவத்தின்போது வீட்டிலிருந்தவர்கள் கதவை பூட்டியிருந்ததால் வன்முறை கும்பலினால் வீட்டுக்குள் நுழைய முடியவில்லை என கூறப்படுகின்றது. 

மேலும் 3 பேர் கொண்ட வன்முறை கும்பலே இந்த தாக்குதலை நடத்தியதாகவும் கூறப்படுகின்றது. 

சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு