விஷமிகளால் தீக்கிரையாக்கப்பட்ட வாடி! பல கோடி ரூபாய் பெறுமதியான வலைகள் மற்றும் உபகரணங்கள் நாசம்..

ஆசிரியர் - Editor I
விஷமிகளால் தீக்கிரையாக்கப்பட்ட வாடி! பல கோடி ரூபாய் பெறுமதியான வலைகள் மற்றும் உபகரணங்கள் நாசம்..

யாழ்.வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் மீனவர்களின் வாடி விஷமிகளால் தீக்கிரையாக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் 3 கோடிக்கும் அதிக பெறுமதியுடைய வலைகள் மற்றும் உபகரணங்கள் எரிந்து நாசமாகியுள்ளன. 

குறித்த சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் , முற்பகை காரணமாகவே வாடிக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. 

சம்பவம் தொடர்பில் தொடர் விசாரணைகளை பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு