யாழ்.மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மண்ணெண்ணெய் விநியோகம்! வெளியான அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மண்ணெண்ணெய் விநியோகம்! வெளியான அறிவிப்பு..

யாழ்.குடாநாட்டில் தெரிவு செய்யப்பட்ட சில எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அடுத்த சில நாட்களுக்குள் மண்ணெண்ணெய் பகிர்ந்தளிக்கப்படவுள்ளது. 

சபுஸ்கந்த எண்ணெய் சுத்தீகரிப்பு நிலையத்தின் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் மீனவர்களுக்காக மண்ணெண்ணெய் வழங்கப்பட்டுவந்த நிலையில், 

யாழ்ப்பாணத்தில் தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் அடுத்த சில நாட்களில் மண்ணெண்ணெய் பகிர்ந்தளிக்கப்படவுள்ளது. 

இவ்வாறு விநியோகம் செய்யப்படும் மண்ணெண்ணெய் மீனவர்கள் மற்றும் விவசாயிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு