துாக்க கலக்கத்தில் ரயிலில் இருந்து தவறி விழுந்த இராணுவ சிப்பாய் யாழ்.தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதி..! யாழ்.சுன்னாகத்தில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
துாக்க கலக்கத்தில் ரயிலில் இருந்து தவறி விழுந்த இராணுவ சிப்பாய் யாழ்.தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதி..! யாழ்.சுன்னாகத்தில் சம்பவம்..

ரயிலில் துாங்கியதால் இறங்கவேண்டிய இடத்தில் இறங்காமல் மற்றொரு புகைரத நிலையத்தில் இறங்க முற்பட்டபோது துாக்க கலக்கத்தில் தாடுமாறி விழுந்த இராணுவ சிப்பாய் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

யாழ்ப்பாணத்தில் கடமையாற்றும் எஸ். விஜயசிங்க (வயது 26) எனும் இராணுவ சிப்பாயே காயமடைந்துள்ளார். குறித்த சிப்பாய் தனது ஊரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கடமைக்காக கொழும்பு - யாழ்ப்பாணம் கடுகதி புகையிரதத்தில் வந்துள்ளார். 

யாழ்ப்பாண நிலையத்தில் இறங்க வேண்டியவர் , தூக்கத்தினால் அதனை தவற விட்டுள்ளார். திடீரென தூக்கத்திலிருந்து எழுந்தவர் புகையிரதம் சுன்னாகம் புகையிரத நிலையத்தில் தரித்து நிற்பதனை அவதானித்து, 

தூக்க கலக்கத்துடன் அவசரமாக இறங்க முற்பட்ட நிலையில் புகையிரதத்தில் இருந்து தவறி விழுந்து காயமடைந்துள்ளார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு