யாழ்.கோண்டாவிலில் 23 வயதான இளைஞன் ஒரு தொகை போதை மாத்திரைகளுடன் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.கோண்டாவிலில் 23 வயதான இளைஞன் ஒரு தொகை போதை மாத்திரைகளுடன் கைது!

யாழ்.கோண்டாவில் பகுதியில் ஒரு தொகை போதை மாத்திரைகளுடன் 23 வயதான இளைஞன் ஒருவன் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

கோண்டாவில் - வீரபத்திரர் கோவிலடியை சேர்ந்த இளைஞர் ஒருவர் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபடுவதாக கிடைத்த இரகசிய தகலையடுத்து, 

உடனடியாக இளைஞனை மடக்கிய பொலிஸார் ஒரு தொகை போதை மாத்திரைகள் மற்றும் போதை மாத்திரை வியாபாரத்தினால் கிடைத்த பணம் ஆகியவற்றை மீட்டனர். 

கைது செய்யப்பட்ட இளைஞனை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு