குழந்தையை துாக்குவதுபோல் பாசாங்கு செய்து 4 லட்சம் பெறுமதியான சங்கிலியை அறுத்த யாழ்.அராலியை சேர்ந்த பெண் கைது! நல்லுார் உற்சபத்தில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
குழந்தையை துாக்குவதுபோல் பாசாங்கு செய்து 4 லட்சம் பெறுமதியான சங்கிலியை அறுத்த யாழ்.அராலியை சேர்ந்த பெண் கைது! நல்லுார் உற்சபத்தில் சம்பவம்..

நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தில் கையில் குழந்தையுடன் நின்றிருந்த பெண்ணின் தங்க சங்கிலியை அறுத்துச் சென்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அறுத்துச் செல்லப்பட்ட 4 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க சங்கிலியும் மீட்கப்பட்டுள்ளது. 

இந்தக் கொள்ளைச் சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற நிலையில் சந்தேக நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். தாயாரிடமிருந்த கைக்குழந்தை அழுத்தால் தான் பார்ப்பதாக கூறி பாசாங்கு செய்த மேற்படி கைது செய்யப்பட்ட பெண் 

குழந்தையின் தாயார் அணந்திருந்த சங்கிலியை அறுத்து எடுத்துக் கொண்டு தப்பித்துள்ளார்.சங்கிலியை பறிகொடுத்த பெண் நல்லூர் உற்சவகால பொலிஸ் பிரிவில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் 

யாழ்.மாவட்ட புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.அராலியைச் சேர்ந்த 39 வயதுடைய பெண் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து கொள்ளையிட்ட நகையும் கைப்பற்றப்பட்டது. 

என்று பொலிஸார் கூறினர். சந்தேக நபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு