காணி மோசடியால் பாதிக்கப்பட்ட வடமாகாண மக்களுக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜா விடுத்துள்ள விசேட அறிவிப்பு..!

ஆசிரியர் - Editor I
காணி மோசடியால் பாதிக்கப்பட்ட வடமாகாண மக்களுக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜா விடுத்துள்ள விசேட அறிவிப்பு..!

வடமாகாணத்தில் காணி மோசடியினால் பாதிக்கப்பட்டவர்கள் தமது விபரங்களை ஆளுநர் செயலகத்தில் சமர்ப்பிக்கும்படி ஆளுநர் ஜீவன் தியாகராஜா கோரிக்கை விடுத்திருக்கின்றார். 

இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

வடமாகாணத்தில் தனியார் காணிகள் பலவற்றை பல்வேறு வழிகளில் மோசடி செய்து ஆக்கிரமித்துள்ள சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதை அறிகிறோம். அவ்வாறு மோசடிக்காரர்களால் பாதிக்கப்பட்டவர்கள், 

தங்களிடம் உள்ள ஆவணங்களுடன் யாழ்.பழைய பூங்காவில் உள்ள ஆளுநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளும் பட்சத்தில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தீர்வு வழங்கப்படும் என ஆளுநர் அறிவித்துள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு