யாழ்.கல்வியங்காட்டில் வீடு புகுந்து மோட்டார் சைக்கிள் திருட்டு..!

ஆசிரியர் - Editor I
யாழ்.கல்வியங்காட்டில் வீடு புகுந்து மோட்டார் சைக்கிள் திருட்டு..!

யாழ்.கல்வியங்காடு கலைமகள் வீதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த திருடர்கள் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை திருடிச் சென்றுள்ளனர். 

இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது. 

வீட்டின் கேற்றைத் திறந்து உள்நுளைந்த திருடர்கள் வீட்டின் முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடி சென்றுள்ளனர்.

குறித்த திருட்டு சம்பவம் வீட்டில் பொருத்தியிருந்த சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் 

வீட்டின் உரிமையாளரினால் கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்படுள்ளதுடன் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு