தனிமையில் வாழ்ந்த பெண் வீட்டில் சடலமாக மீட்பு! யாழ்.இணுவிலில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
தனிமையில் வாழ்ந்த பெண் வீட்டில் சடலமாக மீட்பு! யாழ்.இணுவிலில் சம்பவம்..

யாழ்.இணுவில் - மஞ்சத்தடி கொட்டடம்பனை பகுதியில் தனிமையில் வாழ்ந்த 62 வயதான வயோதிப பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார். 

சம்பவத்தில் தெய்வேந்திரம் வசந்தி (வயது62) என்ற வயோதிப பெண்ணே சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார். 

அவருடைய இரு பிள்ளைகள் வெளிநாட்டிலுள்ள நிலையில் மற்றொரு பிள்ளை வெளிமாவட்டத்தில் வசித்துவருகின்றார். 

இந்நிலையில் தனிமையில் வாழ்ந்துவந்த வயோதிப பெண்ணை அவருடைய இரு சகோதரர்கள் கண்காணித்துவந்தனர். 

வழங்கம்போல் நேற்று காலை வயோதிப பெண்ணின் வீட்டுக்கு சாப்பாடு கொடுக்க சென்றிருந்தபோது அவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார். 

பின்னர் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸாருக்க தகவல் வழங்கிய நிலையில் பொலிஸார் சடலத்தை மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு