மேய்ந்து கொண்டிருந்த மாட்டின் காலை வெட்டி துண்டாக்கிய காடையர்கள்! யாழ்.முளாய் முன்கோடையில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
மேய்ந்து கொண்டிருந்த மாட்டின் காலை வெட்டி துண்டாக்கிய காடையர்கள்! யாழ்.முளாய் முன்கோடையில் சம்பவம்..

யாழ்.மூளாய் - முன்கோடை பகுதியில் உள்ள காணி ஒன்றினுள் மேய்ந்து கொண்டிருந்த பசு மாட்டின் கால்களை விசமிகள் வெட்டி துண்டாடப்பட்ட சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இது குறித்து மேலும் தெரியவருவதாவது இன்று வெள்ளிக்கிழமை வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் முன்கோடை பகுதியில் காணியொன்றில் மேய்சலிற்காக நின்ற பசு மாட்டின் பின் கால் ஒன்று வெட்டி துண்டாடப்பட்டதுடன்,

மற்றைய காலிலும் வெட்டுக்காயம் ஏற்பட்டது. விசமிகளால் மாடு தாக்குதலுக்குள்ளாகிய மாடு இறக்கும் நிலைக்கு சென்ற நிலையில் உரிமையாளரால் மீட்கப்பட்டு வைத்தியம் செய்யப்பட்டிருப்பதுடன், 

சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்யப்படடிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு