யாழ்.பன்னாலையில் போலி நாணயதாள் அச்சிட்டவர் சிக்கினார்! யாழ்.மாவட்டத்தில் தொடரும் போலி நாணயதாள் மோசடிகள்..

ஆசிரியர் - Editor I
யாழ்.பன்னாலையில் போலி நாணயதாள் அச்சிட்டவர் சிக்கினார்! யாழ்.மாவட்டத்தில் தொடரும் போலி நாணயதாள் மோசடிகள்..

5 ஆயிரம் ரூபாய் பெறுமதியான போலி நாணய தாள்களை பயன்படுத்தி இளவாலை மற்றும் தெல்லிப்பழை பகுதிகளில் பொருட்களை வாங்கிய 27 வயதான சந்தேகநபர் பன்னாலை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், நாணய தாள் அச்சிடுவதற்குப் பயன்படுத்திய உபகரணங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர். 

தெல்லிப்பழை மற்றும் இளவாலை பகுதிகளில் உள்ள கடைகளுக்கு அண்மையில் சென்ற ஒருவர் 5 ஆயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்களை வழங்கி பொருள்களை வாங்கிவிட்டு மிகுதிப் பணத்தை பெற்றுச் சென்றுள்ளார்.

போலி நாணயத்தாள்கள் என அறிந்த கடைக்காரர்கள் இருவர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.முறைப்பாடுகள் தொடர்பில் காங்கேசன்துறை பிராந்திய புலனாய்வு பிரிவின் தகவலின் அடிப்படையில் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் 27 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டார்.

போலி நாணயத்தாள்களை அச்சிடப் பயன்படுத்திய உபகரணங்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டன. சந்தேக நபர் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நேற்று மாலை முற்படுத்தப்பட்டார். 

சந்தேக நபரை வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு