யாழ்.மாவட்டத்தில் மாலைவேளையில் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படுவது ஏன்? யாழ்.மாவட்டச் செயலர் விளக்கம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் மாலைவேளையில் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படுவது ஏன்? யாழ்.மாவட்டச் செயலர் விளக்கம்..

யாழ்.மாவட்டத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மாலையுடன் மூடப்படுவதற்கு காரணம் சண்டியர்களின் அட்டகாசத்தை குறைப்பதற்கும், பதுக்கல் வியாபாரிகளைக் கட்டுப்படுத்துவதற்குமே என யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் கூறியுள்ளார். 

எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மாலையுடன் மூடப்படுவது தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார். இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில், 

கடந்தவாரம் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு இருந்தேன். அதன் போது எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மாலை வேளைகளில் மது போதையில் கூடும் சண்டியர்கள், 

மற்றும் கறுப்பு சந்தை வியாபாரிகள், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குழப்பங்களை ஏற்படுத்துவதுடன், விரும்பத்தகாத செயல்களிலும் ஈடுபடுகின்றனர். இதனால் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களின் பாதுகாப்பு கேள்விக்கு உள்ளாகிறது. 

ஆகவே தாம் மாலை வேளையுடன் எரிபொருள் நிரப்பு நிலையங்களை மூடுவதாக உரிமையாளர்கள் தெரிவித்தனர். எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் , அப்பகுதி பிரதேச செயலர் ஆகியோரின் முடிவின் பிரகாரம்

 மாலையுடன் மூடுவதா இல்லையா என முடிவெடுக்கப்படும். என தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு