நல்லுார் உற்சபத்தை இலக்காக கொண்டு வெளியிடங்களில் இருந்து திருடர்கள் நுழையலாம்! யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விடுத்துள்ள எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I
நல்லுார் உற்சபத்தை இலக்காக கொண்டு வெளியிடங்களில் இருந்து திருடர்கள் நுழையலாம்! யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விடுத்துள்ள எச்சரிக்கை..

யாழ்.நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோட்சபத்தில் பங்கேற்கும் பொதுமக்கள் தங்க ஆபரணங்கள் அணிவதை தவிர்த்து பாதுகாப்போடு நடந்து கொள்வது சிறந்தது. என யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உஜித் லியனகே கூறியிருக்கின்றார். 

யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், 

இம் மாதம் 2ம் திகதியில் இருந்து வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகி இடம்பெறுகின்றது.  ஆலய வளாகத்தில் தேவையானஅளவு பாதுகாப்பு பொலிசாரினால் வழங்கப்பட்டுள்ளது. 

அத்தோடு விசேட பொலிஸ் அணியும் இங்கே வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.  யாழ்ப்பாணத்தில் மிகவும் முக்கியமான உற்சவமாக நல்லூர் ஆலய உற்சவம் இடம் பெறுவதனால் 

இந்த ஆலயத்திற்கு வரும் அடியவர்களின் எண்ணிக்கையும் அதிக அளவில் காணப்படும் ஆலயத்திற்கு வருகின்ற பக்தர்களுக்கு ஒரு கோரிக்கையை முன்வைக்கப்படுகின்றேன் தங்க ஆபரணங்கள் அணிந்து ஆலயத்திற்கு வருவதை தவிர்த்துக் கொள்ளுங்கள் 

ஏனென்றால் அதிக மக்கள் கூடும் இடத்தில் திருட்டு சம்பவங்களும் இடம்பெறலாம். அந்த திருட்டுக்களை தடுப்பதற்கு தங்களுடைய ஒத்துழைப்பு முக்கியம். 

திருட்டுச் சம்பவங்களை மேற்கொள்வதற்கு வெளி மாவட்டங்களிலிருந்து ஒரு சிலர் இங்கே அணியாக வந்து செயற்படுவார்கள்.  எனவே தங்களுடைய நகைகள் மற்றும் அதிக பணங்களை ஆலயத்திற்கு வரும்போது எடுத்து வருவதை தவிருங்கள்.

அத்தோடு நல்லூர் வளாகத்தில் சிவில் மற்றும் பொலிஸார் சீருடையுடனும், சிவில் உடையிலும் தேவையான அளவிற்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.

அத்தோடு திருட்டுத் தொடர்பில் சந்தேக நபர்கள் தொடர்பில் தகவல் இருந்தால் பொலிசாரிடம் தெரியப்படுத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் குறிப்பாக கடந்த வாரத்தில் சில திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. 

அந்த சம்பவங்களை நாங்கள் உற்று நோக்கும்போது பொதுமக்களின் அசண்டையீனத்தின் காரணமாக இந்த திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. 

குறிப்பாக தங்களுடைய வீடுகள் ஜன்னல்களை ஒழுங்காக பூட்டாமல் வெளியில் செல்லுதல் அல்லது பூட்டிவிட்டு திறப்பினை பாதுகாப்பில்லாத இடத்தில் பேணுவதால் திருட்டு சம்பவங்கள் இடம்பெறுகின்றன.

எனவே அவ்வாறான சம்பவங்களையும் பொதுமக்கள் நீங்கள் கருத்தில் எடுக்க கொள்ள வேண்டும் அத்தோடு தற்போதைய காலகட்டத்தில் டெங்கு மற்றும் கொரோனா தொற்று அதிகரித்து காணப்படுகின்றது. 

னவே கடந்த காலங்களில் பொலிஸாருக்கும் மற்றும் சுகாதாரப் பிரிவினருக்கும் பொது மக்கள் நீங்கள் ஒத்துழைப்பு வழங்கியதை போல தற்போதுள்ள நிலையிலும்  உரிய ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு