கல்வி கற்பதற்கான உரிமை மறுக்கப்படுகிறது! மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மாணவி முறைப்பாடு..

ஆசிரியர் - Editor I
கல்வி கற்பதற்கான உரிமை மறுக்கப்படுகிறது! மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மாணவி முறைப்பாடு..

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் பாடசாலை ஒன்றில் இருந்து விலகி பிறிதொரு பாடசாலையில் சேர்வதற்கான இடைவிலகலுக்கான விண்ண படிவம் தனக்கு உரிய முறையில் தரவில்லை என மாணவி ஒருவர் மனித உரிமை ஆணைக்குழுவில் நேற்று திங்கட்கிழமை முறைப்பாடு செய்திருக்கின்றார். 

குறித்த முறைப்பாட்டை தொடாந்து யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மாணவி மற்றும் தாய் இவ்வாறு கருத்து தெரிவித்தனர். மாணவியின் தாய்  - குறித்த தனியார் பாடசாலையில் தனது பிள்ளையை மனரீதியாக பாதிக்கும் வகையில் பல செயற்பாடுகள் இடம்பெற்றதை எனது பிள்ளை என்னிடம் தெரிவித்தார்.

அதன் காரணமாக குறித்த பாடசாலையில் கல்வி கற்பதில் தனது பிள்ளைக்கும் விருப்பமின்மையால் இடைவிலகலுக்கான படிவத்தை தருமாறு பாடசாலை அதிபரிடம் கோரிக்கை விடுத்தேன். நான் கொழும்பில் கல்வியை தொடரபோவதாக தெரிவித்த நிலையில் அவர்கள் இடைவிலகர் படிவம் தருவதற்கு இழுத்தடித்தார்கள்.

நான் கொழும்பு செல்ல வேண்டும் எனக்கு இன்றே அதை தாருங்கள் அல்லது குறித்த பாடசாலைக்கு பொறுப்பாக உள்ள கிறிஸ்தவ பாதிரியாரை சந்திக்க அனுமதிக்குமாறு கூறினேன். அனுமதிக்காத பாடசாலை நிர்வாகம் இடைவிலகலுக்கான படிவத்தை தராது பிறிதொரு படிவத்தில் எனது பிள்ளையின் ஒழுக்கம் தொடர்பில் ஆரோக்கியமான வார்த்தையை பதிவிடப்படாதது எனக்கு மன வேதனையை தந்தது.

எனது பிள்ளை குறித்த தனியார் பாடசாலையை விட்டு விலகி பிறிதொரு பாடசாலையில் சேரக்கூடாதென பழிவாங்கும் நோக்கில் ஒழுக்கம் தொடர்பில் மிகமோசமான கருத்தை இடைவிலகலுக்கான படிவத்தில் பதிவிட்டதாக கருதுகிறேன். எனது பிள்ளையின் ஒழுக்கம் சரியில்லாமல் இருந்தால் ஏன் இவ்வளவு காலம் எனது பிள்ளையை பாடசாலையில் அனுமதித்திருந்தீர்கள்?

அல்லது ஒழுக்கம் தொடர்பில் ஏன் எனக்கு கூறவில்லை என கேள்வி எழுப்பினேன் அதற்கு அவர்கள் ஒன்றும் பேசவில்லை. ஆகவே திட்டமிட்ட முறையில் எனது பிள்ளையை குறித்த தனியார் பாடசாலை பழி வாங்குவதாக நினைக்கிறேன். குறித்த மாணவி கருத்து தெரிவிக்கும்போது கொடுத்த பாடசாலையில் இடம் பெற்ற செயற்பாடுகள் தொடர்பில் தான் மனுநீதியாக பாதிப்படைந்த நிலையில் குறித்த கல்லூரியில் இருந்து விலக முற்பட்டதாக தெரிவித்தார்.

கல்வி அடிப்படை உரிமைகளில் ஒன்றாகக் காணப்படும் நிலையில் விரும்பிய பாடசாலையில் எனது பிள்ளை கல்வியை தொடர்வதற்கு வழி ஏற்படுத்தி தர இடைநிலைக் விண்ணப்பத்தை உரிய முறையில் பெற்றுத்தர வேண்டும் என்பதோடு எனது பிள்ளையின் ஒழுக்கம் தொடர்பில் பதிவிட்ட காரணத்திற்கான சான்றையும் கூற வேண்டும் எனக்கோரி இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளோம். 

என அவர் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு