யாழ்.வடமராட்சி கிழக்கு மணற்காடு பகுதியில் வீடு சுற்றிவளைப்பு..! 13 பேர் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.வடமராட்சி கிழக்கு மணற்காடு பகுதியில் வீடு சுற்றிவளைப்பு..! 13 பேர் கைது..

யாழ்.வடமராட்சி கிழக்கிலிருந்து கடல்வழியாக வெளிநாடு செல்ல முயற்சித்த 13 பேர் மணற்காடு பகுதியில் பொலிஸ் சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

வீடொன்றில் தங்கியிருந்த நிலையில் நேற்றய தினம் பொலிஸார் நடத்திய சுற்றிவளைப்பில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

வடமராட்சி கிழக்கு கடற்பகுதி ஊடாக அவுஸ்ரேலியா செல்வதற்கு குழு ஒன்று திட்டமிட்டு தயாராகியுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

இதனடிப்படையில் பொலிஸார் நடத்திய விசாரணையில் சந்தேகத்திற்கிடமாக சிலர் தங்கியிருந்த வீடு மணற்காடு பகுதியில் சுற்றிவளைக்கப்பட்டது. 

அங்கிருந்த 13 பேரை கைது செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு