யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்ற பல தொலைபேசி திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய கும்பல் கைது! 43 தொலைபேசிகள் மீட்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்ற பல தொலைபேசி திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய கும்பல் கைது! 43 தொலைபேசிகள் மீட்பு..

யாழ்.மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற தொலைபேசி திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 3 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டிருக்கின்றது. 

சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, தொலைபேசி திருட்டு சம்பவங்கள் தொடர்பாக வழங்கப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட புலன் விசாரணைகளின் அடிப்படையில், 

யாழ்.நாவற்குழி மற்றும் குருநகர் பகுதிகளை சேர்ந்த 3 பேர் கொண்ட குழு கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து சுமார் 43 தொலைபேசிகள் மீட்கப்பட்டிருக்கின்றது. 

அவற்றின் பெறுமதி சுமார் 15 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என கூறியுள்ள பொலிஸார் பேருந்துகளில் ஏறி போதை அடிமைகளான குறித்த சந்தேகநபர்கள் திருட்டில் ஈடுபட்டிருப்பதாகவும், 

யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற பல தொலைபேசி திருட்டு சம்பவங்களுடன் சந்தேகநபர்களுக்கு தொடர்புள்ளதாகவும் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். இதேவேளை தொலைபேசி திருடுபோனவர்கள் 

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்க சென்று தமது தொலைபேசிகளை அடையாளம் காட்ட முடியும் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு