யாழ்.கொடிகாமம் கெற்பேலியில் இராணுவ சுற்றிவளைப்பில் இருவர் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.கொடிகாமம் கெற்பேலியில் இராணுவ சுற்றிவளைப்பில் இருவர் கைது!

யாழ்.கொடிகாமம் - கெற்பேலி பகுதியில் மணல் கடத்தல் கும்பலை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மணல் ஏற்றப் பயன்படுத்திய உழவு இயந்திரமும் கைப்பற்றப்பட்டிருக்கின்றது. 

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருவதாவது, குறித்த பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றுவதாக இராணுவத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மணல் ஏற்றிய உளவு இயந்திரம் 

மற்றும் அதில் பயணம் செய்த இருவரையும் இராணுவத்தினர் கைது செய்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர். சம்பவம் தொடர்பில் கொடிக்காமப் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு