யாழ்.நுணாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தொடர்ந்தும் எரிபொருள் விநியோகம்! 12.30 மணிவரை 13004 லீற்றர் விநியோகம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.நுணாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தொடர்ந்தும் எரிபொருள் விநியோகம்! 12.30 மணிவரை 13004 லீற்றர் விநியோகம்..

யாழ்.நுணாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று நண்பகல் 12.30 மணிவரையில் 13004 லீற்றர் பெற்றோல் விநியோகிக்கப்பட்டதாக நுணாவில் ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர் வை. சிவராசா தெரிவித்தார்.

இன்றைய தினத்தில், இதுவரை எரிபொருள் அட்டையை பயன்படுத்தி பெற்றோலைப் பெற்றுக் கொள்ளாதவர்களுக்கும், QR Cord  3, 4, 5 வாகன இலக்கங்களுக்கும் பெற்றோல் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இன்றைய பெற்றோல் விநியோகமானது பிற்பகல் 5.00 மணியுடன் நிறைவடையும் என எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் உரிமையாளர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை நுணாவில் ஐஓசி எரிபொருள் நிரப்ப நிலையத்தில் பெற்றோலைப் பெற்றுக் கொள்வதற்காக பெருந்திரளான மக்கள் வரிசையில் காத்திருக்கிறார்கள். 

இருந்தபோதிலும் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் விரைவான சேவையை வழங்கி வருகின்றமையை காணக் கூடியதாக இருக்கின்றது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு