யாழ்.அச்சுவேலி - பத்தமேனியில் கத்தி மற்றும் ஓடிக்கொலனுடன் வீட்டுக்குள் நுழைந்தவர் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டார்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.அச்சுவேலி - பத்தமேனியில் கத்தி மற்றும் ஓடிக்கொலனுடன் வீட்டுக்குள் நுழைந்தவர் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டார்..!

யாழ்.அச்சுவேலி - பத்தமேனி பகுதியில் தனிமையில் இருந்த பெண்மணி ஒருவருடைய வீட்டுக்கு கத்தி மற்றும் ஓடிக்கொலோன், சாப்பாட்டு பாசலுடன் நுழைந்தவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பத்தமேனி பகுதியில் வீட்டில் தனியே வசிக்கும் பெண்ணொருவரின் வீட்டுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை குறித்த இளைஞன் சென்று வீட்டு வளாகத்தை துப்பரவு செய்துள்ளார். 

பின்னர் வேலையை முடித்துக் கொண்டு சம்பளத்தையும் வாங்கிக்கொண்டு அங்கிருந்து சென்றுள்ளார். அதன் பின்னர் வீட்டில் இருந்த பெண்மணி தனது இரண்டு பெறுமதியான கைபேசிகள் காணாமல் போயிருந்தமை தொடர்பில் அறிந்து அயலவர்களிடம் அது தொடர்பில் கூறியுள்ளார். 

வீட்டு வேலை செய்து திரும்பிய இளைஞன் மீதே அனைவருக்கும் சந்தேகம் ஏற்பட்டு இருந்தது. அந்நிலையில் இரவு மீண்டும் அந்த இளைஞன் சாப்பாட்டு பார்சல் ஒன்றுடன் அந்த பெண்மணியின் வீட்டுக்கு வரும்போது அயலவர்கள் மடக்கி பிடித்தனர். 

இளைஞனிடம் விசாரித்தபோது , பெண்மணி தனியே வீட்டில் இருப்பதனால் அவருக்கு பாதுகாப்பாக இருக்கவே தான் வந்ததாக கூறியுள்ளார். கைபேசி தொடர்பில் கேட்ட போது , தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார். 

தனை அடுத்து இளைஞனை ஊரவர்கள் பரிசோதித்த போது அவரது உடைமையில் இருந்து சிறிய ரக கத்தி , ஓடிக்கோலன் உள்ளிட்டவையும் மீட்கப்பட்டது. அதனை அடுத்து ஊரவர்கள் இளைஞனை அச்சுவேலி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு