யாழ்.தென்மராட்சியில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி..!

ஆசிரியர் - Editor I
யாழ்.தென்மராட்சியில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி..!

யாழ்.தென்மராட்சி பகுதியல் மேலும் இரு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். 

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கச்சாய் வீதி கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த 82வயதான முதியவர் ஒருவரும், 

நேற்று (23) சனிக்கிழமை கச்சாய் வீதி சாவகச்சேரிப் பகுதியைச் சேர்ந்த 67 வயதான பெண் ஒருவருமே இவ்வாறு புதிய கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

குறித்த இருவரும் நோய் அறிகுறி தென்பட்ட நிலையில் தனியார் வைத்தியசாலையில் மேற்கொண்ட அன்ரிஜன் பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதோடு, 

பின்னர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இம் மாத ஆரம்பத்தில் தென்மராட்சியின் கைதடி மற்றும் அல்லாரைப் பகுதிகளைச் சேர்ந்த இருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு