யாழ்.கோண்டாவிலில் 3 இடங்களில் கொள்ளை! பொலிஸாரால் தேடப்பட்டுவந்த போதை அடிமை, நகைக்கடை உரிமையாளர் அடங்கலாக 10 பேர் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.கோண்டாவிலில் 3 இடங்களில் கொள்ளை! பொலிஸாரால் தேடப்பட்டுவந்த போதை அடிமை, நகைக்கடை உரிமையாளர் அடங்கலாக 10 பேர் கைது!

யாழ்.கோண்டாவில் பகுதியில் இடங்களில் இடம்பெற்ற கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய 10 பேர் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

கைது செய்யப்பட்டவர்களில் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள், திருட்டு நகைகளை விற்பனை செய்ய உதவிய நகைக்கடை உரிமையாளர், மற்றும் உடந்தையாக செயற்பட்டோரும் அடங்கியுள்ளனர். 

கடந்த மே, ஜூன் மாதங்களில் கோண்டாவில் மஞ்சத்தடியில் இரண்டு வீடுகளை உடைத்து தங்க நகைகள், பெறுமதிவாய்ந்த தொலைபேசிகள், சமையல் எரிவாயு சிலிண்டர் 

மற்றும் துவிச்சக்கர வண்டியைத் திருடியமை தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. அத்துடன், மற்றொரு வீட்டில் பெண் அணிந்திருந்த தங்க நகை அறுக்கப்பட்டிருந்தது. 

அதுதொடர்பிலும் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யபட்டிருந்தது. இச்சம்பவங்கள் தொடர்பில் தலைமை பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்சிஸ் தலைமையிலான 

மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். சம்பவங்கள் தொடர்பில் சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் உடந்தையாக இருந்தவர்கள் அடகு வைத்துக் கொடுத்தவர்கள் என கிளிநொச்சி, சுன்னாகத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் யாழ்பபாணம் நகைக்கடை உரிமையாளர் 

என மேலும் 9 பேர் கைது செய்யப்பட்டனர். அத்துடன் திருட்டப்பட்ட பொருள்கள், கொள்ளையிடப்பட்ட பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பிரதான சந்தேக நபர் போதைப்பொருளுக்கு அடிமையாகி 

தொடர்ச்சியாக கொள்ளை மற்றும் திருட்டில் ஈடுபட்டு வந்ததுடன் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்தவர் என்று பொலிஸார் கூறினர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு