யாழ்.மாவட்டச் செயலகத்தின் முன்பாக ஏ-9 வீதியை முடக்கி மக்கள் போராட்டம்! எரிபொருள் வழங்கலில் மீண்டும் குழப்பம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டச் செயலகத்தின் முன்பாக ஏ-9 வீதியை முடக்கி மக்கள் போராட்டம்! எரிபொருள் வழங்கலில் மீண்டும் குழப்பம்..

யாழ்.மாவட்டத்தில் எரிபொருள் வழங்கலுக்கான புதிய நடைமுறை அமுலப்படுத்தப்பட்டுள்ளமையினை கண்டித்து யாழ்.மாவட்டச் செயலகம் முன்பாக ஏ-9 வீதியை முற்றுகையிட்டு இன்று காலை பொதுமக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். 

மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நீண்ட நாட்களாக எரிபொருளுக்காக காத்திருந்தவர்களே ஏ9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இணைய வழியில் பதிவு செய்பவர்களுக்கே எரிபொருள் வழங்கப்படும் என மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் தெரிவித்ததால் பல நாட்களாக காத்திருந்த பொதுமக்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ஏ9 வீதி வழியான போராட்ட போக்குவரத்து தற்போது தற்காலிகமாக தடைப்பட்டு உள்ளது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு