இ.போ.ச பேருந்தின் மிதிபலகை உடைந்து விழுந்து ஒருவர் காயம்..! யாழ்.ஆனைக்கோட்டையில் சம்பவம்...

ஆசிரியர் - Editor I
இ.போ.ச பேருந்தின் மிதிபலகை உடைந்து விழுந்து ஒருவர் காயம்..! யாழ்.ஆனைக்கோட்டையில் சம்பவம்...

அதிகளவான பயணிகள் மிதி பலகையில் நின்றதால் மிதி பலகை உடைந்து விழுந்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார். 

குறித்த சம்பவம் நேற்றைய தினம் காலை 6 மணியளவில் காரைநகரிலிருந்து பயணித்த 786 வழித்தட இ.போ.ச பேருந்தில் இடம்பெற்றுள்ளது. 

மேற்படி பேருந்து ஆனைக்கோட்டை பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது பேருந்தின் மிதி பலகை உடைந்து விழுந்துள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தொிவித்துள்ள காரைநகர் இ.போ.ச சாலை முகாமையாளர் குணசிலன் கூறுகையில், 

அதிகளவான மக்கள் பேருந்தின் மிதி பலகையில் நின்று பயணித்தமையே இந்த அனர்த்தத்திற்கு காரணம் என கூறியதுடன், 

மிதி பலகையிலிருந்து பயணம் செய்வதை பொதுமக்கள் தவிர்க்கவேண்டும் எனவும், பொலிஸாருக்கும் இது தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

எனவும் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு