யாழ்.நாரந்தனையில் 7 வயது சிறுமி தண்ணீர் பவுசரின் சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு!

ஆசிரியர் - Editor I
யாழ்.நாரந்தனையில் 7 வயது சிறுமி தண்ணீர் பவுசரின் சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு!

யாழ்.நாரந்தனை பகுதியில் தண்ணீர் விநியோக பவுசரில் ஏறி விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி தவறி கீழே விழுந்து பவுசரின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். 

குறித்த சம்பவம் கடந்த திங்கள் கிழமை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் யசோதரன் ஜாக்சனா (வயது7) என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார். சிறுவர்கள் சிலர் தண்ணீர் பவுசரில் ஏறி விளையாடியுள்ளனர். 

இதன்போது குறித்த சிறுமி பவுசரில் இருந்து தவறி விழுந்து சக்கரத்திற்குள் சிக்கி நசியுண்ட நிலையில் உயிரிழந்துள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு