யாழ்.நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நள்ளிரவில் டீசல் வியாபாரம்..! பொதுமக்கள் - எரிபொருள் நிரப்பு நிலையத்தினர் இடையில் முறுகல், பொலிஸார் தலையீடு..

ஆசிரியர் - Editor I
யாழ்.நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நள்ளிரவில் டீசல் வியாபாரம்..! பொதுமக்கள் - எரிபொருள் நிரப்பு நிலையத்தினர் இடையில் முறுகல், பொலிஸார் தலையீடு..

யாழ்.நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று நள்ளிரவு திருட்டு தனமாக டீசல் வியாபாரம் இடம்பெற்றமையை பொதுமக்கள் கண்டுபிடித்ததால் பொதுமக்களுக்கும் எரிபொருள் நிரப்ப நிலையத்தினருக்கும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. 

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பல நாட்களாக எரிபொருள் இல்லை. என பதாகைகள் வைக்கப்பட்டு எரிபொருள் நிரப்பு நிலையம் பூட்டப்பட்டிருந்த நிலையில் நேற்று நள்ளிரவு யாழ்ப்பாணத்தில் உள்ள வர்த்தகர்கள் சிலரின் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பபட்டுள்ளது. 

இதனையடுத்து பொதுமக்கள் நியாயம் கேட்டக சென்றிருந்தபோது எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்தோர் தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளனர். இதனையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்த நிலையில், 

பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்ததுடன் இரு தரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு