யாழ்.மாவட்டத்தில் பாண் உள்ளிட்ட சகல வெதுப்பக உற்பத்தி பணிகளும் 11ம் திகதியுடன் முடங்கும்! இராணுவத்தினரும் உதவ மறுத்தால் அதுதான் நிலைமை...

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் பாண் உள்ளிட்ட சகல வெதுப்பக உற்பத்தி பணிகளும் 11ம் திகதியுடன் முடங்கும்! இராணுவத்தினரும் உதவ மறுத்தால் அதுதான் நிலைமை...

இம்மாதம் 11ம் திகதிதொடக்கம் யாழ்.மாவட்டத்தில் வெதுப்பக உற்பத்திகள் முற்றாக நிறுத்தப்படும் நிலையேற்பட்டுள்ளதாக மாவட்ட வெதுப்பக உரிமையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

இது குறித்து நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தொிவிக்கும்போதே அவர்கள் மேற்கண்டவாறு கூறியுள்ளனர். இதன்போது மேலும் அவர்கள் தொிவிக்கையில், 

இயற்கை அனர்த்தங்கள் உருவாகும்போது எமது உதவியை மாவட்ட செயலகத்தினர் எதிர்பார்க்கின்றனர். ஆனால் தற்போது எம்மை கைவிட்டுள்ளனர். 

நாம் எமக்கு டீசலை பெற்று தரக்கோரி பல தடவை கோரிக்கை விடுத்தும் அதற்கு யாரும் செவிசாய்க்கவில்லை. இந்நிலையில் தொடர்ந்து நம்மால் வெதுப்பாக உற்பத்திகளை செய்ய முடியாது.

கறுப்புச் சந்தையில் டீசலைப் பெற்று மக்களுக்கு வெதுப்பக உற்பத்திகளை வழங்க முடியாது. இறுதியாக நாம் டீசலை பெற்றுதரக்கோரி இராணுவத்தினரின் உதவியை நாடவிருக்கின்றோம் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு