யாழ்.போதனா வைத்தியசாலைக்கு 10 துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு..!

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலைக்கு 10 துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு..!

யாழ்.போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் சுகாதார பணியாளர்களின் பயன்பாட்டிற்காக 10 துவிச்சக்கர வண்டிகள்  வழங்கப்பட்டிருக்கின்றது. 

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் நிலையில், பணியாளர்களில் போக்குவரத்தை இலகுபடுத்தும் வகையில் இந்த துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டிருக்கின்றது. 

பிரித்தானியா காரை நலன் புரிச்சங்கத்தினர் ஏற்பாட்டில் நேற்று(6) பத்து துவிச்சக்கர வண்டிகள் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அன்பளிப்பாக கையளிப்பு செய்யப்பட்டது.

மேற்படி கையளிப்பு வைபவத்தில் சங்கத்தின் சார்பாக உபதலைவர் விநாசித்தம்பி நாகேந்திரம், செயலாளர்  பரமநாதர் தவராஜா மற்றும் நிர்வாக சபை உறுப்பினர் கந்தசாமி பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பத்து துவிச்சக்கர வண்டிகளையும் பிரதிப் பணிப்பாளர்கள் பவானந்தராஜா, யமுனானந்தா மற்றும் வைத்தியசாலை நலன்புரிச் சங்கத்தினரும் பெற்றுக்கொண்டனர். 

பிரித்தானியா காரை நலன்புரிச் சங்கத்தினரிடம் வைத்தியர் த.சத்தியமூர்த்தி அவர்கள் மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பாக முன்னதாகவே கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு