யாழ்.பண்ணை கடலில் மீட்கப்பட்ட சடலம் யாசகருடையதாக இருக்கலாம் என சந்தேகம்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.பண்ணை கடலில் மீட்கப்பட்ட சடலம் யாசகருடையதாக இருக்கலாம் என சந்தேகம்..!

யாழ்.பண்ணை கடலில் மிதந்த சடலம் ஒன்று மீனவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் மீட்கப்பட்டிருக்கின்றது. 

கடற்றொழிலாளர்கள் தொழிலுக்காக சென்ற போது சடலமொன்று மிதப்பது இனங்காணப்பட்டு பொலிஸாருக்கு தகவலளிக்கப்பட்டது. 

இதனையடுத்து தடயவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். சடலத்தை பார்வையிட்ட யாழ்.போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் 

முதியவர் தீவகப்பகுதியைச் சேர்ந்த யாசகம் பெறுபவராக இருக்கலாமென சந்தேகம் வெளியிட்டார்.

சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு