மத்திய சுகாதார அமைச்சின் சுற்றுநிருபத்தையே நடைமுறைப்படுத்த மறுக்கும் யாழ்.தெல்லிப்பழை, சாவகச்சோி வைத்தியசாலைகள்...

ஆசிரியர் - Editor I
மத்திய சுகாதார அமைச்சின் சுற்றுநிருபத்தையே நடைமுறைப்படுத்த மறுக்கும் யாழ்.தெல்லிப்பழை, சாவகச்சோி வைத்தியசாலைகள்...

யாழ்.தெல்லிப்பழை மற்றம் சாவகச்சோி ஆதார வைத்தியசாலைகள் மத்திய சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட தாதியர்களுக்கான விசேட விடுமுறை தொடர்பான சுற்றுநிருபத்தையே நிராகரிப்பதாக ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

தாதியா சங்கத்தின் வடமாகாண கிளை மேற்படி முறைப்பாட்டினை கடிதம் மூலம் ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுக்கு கடிதம் அனுப்பி உள்ளது. குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டதாவது,

01/SA/10/2022 சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் பிரகாரம் விசேட விடுமுறையினை ஏனைய மாகாணங்களில் பெற்றுக் கொள்ள முடிந்தாலும் வடமாகாணத்தில் 

விசேடமாக சாவகச்சேரி மற்றும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைகளில் பெறமுடியாதுள்ளது. குறித்த விடையாம் தொடர்பில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருடன் கலந்துரையாடிய நிலையில் 

வைத்தியசாலையின் முகாமையுடன் கலந்துரையாடுமாறு தெரிவித்தனர். எனினும் குறித்த ஆதார வைத்தியசாலைகளின் முகாமையுடன் கலந்துரையாடிய நிலையில் அவர்கள் அதனை மறுப்பதாக கூறப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு