இ.போ.ச பேருந்து நடத்துனரை தள்ளி விழுத்திவிட்டு பணத்தை பறித்த கும்பல்! யாழ்ப்பாணத்திலிருந்து அம்பாறை சென்ற பேருந்தில் துணிகரம்...

ஆசிரியர் - Editor I
இ.போ.ச பேருந்து நடத்துனரை தள்ளி விழுத்திவிட்டு பணத்தை பறித்த கும்பல்! யாழ்ப்பாணத்திலிருந்து அம்பாறை சென்ற பேருந்தில் துணிகரம்...

யாழ்ப்பாணத்திலிருந்து அம்பாறை நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்தின் நடத்துனரை தள்ளி விழுத்திவிட்டு சுமார் 59 ஆயிரம் ரூபாய் பணத்தை கும்பல் ஒன்று கொள்ளையடித்துச் சென்றுள்ளது. 

மேற்படி சம்பவம் நேற்றய தினம் இரவு கிளிநொச்சி - உமையாள்புரம் பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. யாழ்ப்பாணத்திலிருந்து பயணம் செய்த 3 பேர் உமையாள்புரம் பகுதியில் இறங்கியுள்ளனர். 

அவர்கள் பேருந்திலிருந்து இறங்குவதற்கு நடத்துனர் இடம்கொடுத்த நிலையில் நடத்துனரை தள்ளி விழுத்திய குறித்த கும்பல் நடத்துனரிடமிருந்த பணத்தினை பறித்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளனர். 

இதேவேளை குறித்த திருடர்களுடன் தொடர்புடைய வேறு சிலரும் அந்த இடத்தில் காத்திருந்து திருடர்களுடன் சேர்ந்தே ஓடியதாக பேருந்திலிருந்த பயணிகள் தொிவித்துள்ளனர். 

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு