யாழ்.தொல்புரத்தில் மோட்டார் சைக்கிளை உடைத்து திருட்டு! வவுனியாவை சேர்ந்த 20 வயது இளைஞன் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.தொல்புரத்தில் மோட்டார் சைக்கிளை உடைத்து திருட்டு! வவுனியாவை சேர்ந்த 20 வயது இளைஞன் கைது..

யாழ்.தொல்புரம் - வழக்கம்பரை அம்மன் ஆலயத்தின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளின் “டிக்கி” யை உடைத்து அதிலிருந்து தொலைபேசியை திருடிய நபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் காலை இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, தாயாருடன் கோவிலுக்கு வந்திருந்த பெண் ஒருவர் கோவிலின் முன்னால் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார். 

இந்நிலையில் அவருடைய மோட்டார் சைக்கிள் “டிக்கி” யை உடைத்து அதிலிருந்த இரு தொலைபேசிகள் திருடப்பட்டுள்ளது. பின்னர் கோவிலில் இருந்து வெளியேவந்த பெண் மோட்டார் சைக்கிள் உடைக்கப்பட்டுள்ளதை அவதானித்து அங்கிருந்தவர்களிடம் கூறியுள்ளார். 

இதனையடுத்து அங்கு கூடிய பொதுமக்கள் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இளைஞர் ஒருவரை சோதனையிட்டபோது திருடப்பட்ட இரு தொலைபேசிகளும் மீட்கப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு கைது செய்யப்பட்டார். 

சம்பவத்தில் வவனியா நெளுக்குளம் பகுதியை சேர்ந்த 20 வயதான இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு