கண்டு கொள்ளப்படாத சுகயீன விடுமுறை போராட்டம், இன்று காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் குதித்த பருத்தித்துறை கிராமசேவகர்கள்..!

ஆசிரியர் - Editor I
கண்டு கொள்ளப்படாத சுகயீன விடுமுறை போராட்டம், இன்று காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் குதித்த பருத்தித்துறை கிராமசேவகர்கள்..!

யாழ்.பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் கடமையாற்றும் கிராம சேவகர்கள் தமக்கு எரிபொருள் வழங்ககோரி இன்று காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றிணை முன்னெடுத்துள்ளனர். 

சுகயீன விடுப்பு போராட்டத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை ஈடுபட்ட போதிலும் தமக்கான தீர்வு கிடைக்க பெறாததால் தாம் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், 

 தமக்கான தீர்வு கிடைக்கும் வரை பணியை தொடர மாட்டோம் என கிராம சேவையாளர்கள் தெரிவித்தனர். குறித்த கவனயீர்ர்ப்பு போராட்டத்தில், கிராம சேவகர்கள் அத்தியாவசிய அலுவலர்களா? 

அல்லது அநாவசிய அலுவலர்களா? எரிபொருள் விநியோகத்தில் கிராம அலுவலர்களை புறக்கணிக்காதீர்கள், கொவிட் காலத்தில் அத்தியாவசிய அலுவலர்கள் பொருளாதார நெருக்கடி காலத்தில் ?

என பதாதைகள் ஏந்தி இருந்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு