காணாமல்போயிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிறுமி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதி! காரணம் என்ன? பொலிஸார் அசமந்தம் என குற்றச்சாட்டு...

ஆசிரியர் - Editor I
காணாமல்போயிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிறுமி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதி! காரணம் என்ன? பொலிஸார் அசமந்தம் என குற்றச்சாட்டு...

கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் காணாமல் போயிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த 16 வயதான சிறுமி கிளிநொச்சி மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறித்த சிறுமி காணாமல்போன சம்பவம் தொடர்பாக பெற்றோர் வெள்ளிக்கிழமை மாலை யாழ்ப்பாணம் நிலையத்தில் முறைப்பாடு கொடுக்க சென்றபோது முறைப்பாடு ஏற்கப்படவில்லை என கூறப்படுகிறது.

பின்னர் இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் இருந்த சிறுமியின் பெற்றோருக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் உங்கள் பிள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து வைத்தியசாலைக்கு சென்ற பெற்றோர் மீண்டும் யாழ்ப்பாணம் வருகைதந்து ஆளுநர் செயலகத்தை நாடியுள்ளனர். இதன்போது ஆளுநர் செயலகம் இந்த விடயத்தில் தலையிட்டுள்ளதுடன்,

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருடன் பேசியதுடன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யும்படி சிறுமியின் பெற்றோருக்கு கூறப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

இதேவேளை சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனையின் பின்பே சிறுமிக்கு என்ன நடந்தது என்பது வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. அதேவேளை, சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்தது யார்? என்பன போன்ற தகவல்கள் வெளியாகவில்லை.

மேலதிக விபரம் இணைக்கப்படும்...

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு