யாழ்.தெல்லிப்பழை வைத்தியசாலை சம்பவம், காலாவதியான பொருட்களே அழிவாம், பணிப்பாளர் தகவல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.தெல்லிப்பழை வைத்தியசாலை சம்பவம், காலாவதியான பொருட்களே அழிவாம், பணிப்பாளர் தகவல்..

யாழ்.தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் மருந்து களஞ்சியத்தில் தீ விபத்து இடம்பெற்றுள்ள நிலையில் காலாவதியான மருந்துகளே எரிந்துள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.

நேற்றைய தினம் மாலை தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் உள்ள மருந்து களஞ்சியத்தில் திடீர் தீ விபத்து இடம்பெற்றமை தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்

தீ விபத்து ஏற்பட்டமை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்ததோடு   இழப்பீடு தொடர்பில் விசாரணைகளின் பின்னரே தெரியவரும் என தெரிவித்தார்.

கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக நாட்டில் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுவரும் நிலையில் எவ்வாறு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் காலாவதியான மருந்துகள் சேமிக்கப்பட்டது ?

என்ற சந்தேகங்கள் எழுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு