யால்.வலய பாடசாலைகள் இன்று தொடக்கம் வழமைக்கு..! வலயக்கல்வி பணிமனை ஊடக அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
யால்.வலய பாடசாலைகள் இன்று தொடக்கம் வழமைக்கு..! வலயக்கல்வி பணிமனை ஊடக அறிவிப்பு..

யாழ்.கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகள் இன்று தொடக்கம் தடையில்லாமல் வழமைபோல் இயங்கும். என பாடசாலை அதிபர்களுக்கு வலய கல்வி பணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார். 

குறத்த விடயம் தொடர்பாக யாழ்.வலயக்கல்வி பணிப்பாயர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, யாழ்.வலய நகர்புற பாடசாலைகளின் அதிபர்களுடன் கலந்துரையாடிய பின்னர் 

அவர்களின் ஏகோபித்த முடிவாக கல்விச் செயல்பாட்டில் தளர்வில்லாமல் பாடசாலைகளை நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேவையான வகுப்புக்களை நேரடியாகவும் ஏனய மாணவர்கள் zoom, 

teem செயலி மூலமாகவும் கல்வி வழங்கவும் அதனை தீர்மானிக்கும் பொறுப்பையும் அதிபர்கள் ஏற்றுள்ளனர். இதேபோன்று ஏனய பாடசாலைகளும் மாணவர்களுக்கான கற்றல் கற்பித்தல் செயல்பாட்டை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

பாடசாலைகள் மூடப்படாது கல்வி வழங்கப்படவேண்டும், பிரதான பரீட்சைகளை எதிர்நோக்கும் மாணவர்களுக்கு நேரடியாக வகுப்புக்கள் நடத்தப்படல் வேண்டும், 

zoom மூலமான கற்றல் செயற்பாட்டில் ஏனைய மாணவர்களுக்கான இணைக்கப்படவேண்டும், ஆசிரியர் வருகை நேரம் தொடர்பிலும் தரித்திருந்து கற்பிக்கும் காலம் தொடர்பிலும் தளர்வுப்போக்கை கடைப்பிடிக்கலாம், 

இது ஒரு சமூகப்பொறுப்பு என்பதை உணர்ந்து செயல்படல் வேண்டும். கிராமப்புற பாடசாலைகளின் அருகில் இருந்து நகர்புறப் பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்கள் தற்காலிகமாக அருகேயுள்ள பாடசாலைகளில் சென்று கற்றலில் ஈடுபட அனுமதிக்க முடியும். 

இதனை அதிபர்கள் செயல்படுத்தலாம், போக்குவரத்து நெருக்கடிகளுக்கு மாற்றாக மாணவர்களை சைக்கிள்களிலும் நடந்தும் பாடசாலைக்கு செல்ல ஊக்குவிக்க முடியும், 

எவ்வாறெனினும் ஒவ்வொரு பாடசாலை அதிபர்களும் உங்கள் பாடசாலைகளை நடத்தும் பொறுப்பை ஏற்று செயல்படுத்துமாறு பணிக்கப்படுகின்றீர்கள்.

மாகாண கல்விப்பணிப்பாளரால் இது தொடர்பாக விபரிக்கப்பட்ட இணைக்கப்பட்டுள்ள விடயங்களையும் கவனத்தில் எடுத்து செயல்படுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு