இந்து மதகுருவுக்கு கண்டபடி பேச்சு, பௌத்த மதகுருவை கண்டவுடன் பம்மிக் கொண்டிருந்த சண்டியர்கள்..! யாழ்ப்பாணத்தில் நடந்த சம்பவம்...

ஆசிரியர் - Editor I
இந்து மதகுருவுக்கு கண்டபடி பேச்சு, பௌத்த மதகுருவை கண்டவுடன் பம்மிக் கொண்டிருந்த சண்டியர்கள்..! யாழ்ப்பாணத்தில் நடந்த சம்பவம்...

யாழ்.பரமேஸ்வரா சந்தியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் பெறுவதற்கு காத்திருந்தவர்கள் எரிபொருள் பெறுவதற்கான வரிசையை குழப்பியதாக இந்து மத குரு ஒருவரை பேசி அனுப்பிய நிலையில் அடுத்த சில நிமிடங்களில் அதேபோல் வரிசையை குழப்பிய பௌத்த பிக்குவை பண்டு பம்பிக் கொண்டிருந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, யாழ்.மாவட்டத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் நின்று எரிபொருள் பெற்று வருகின்றனர். அவ்வாறே பரமேஸ்வரா சந்தியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் மக்கள் வரிசையில் நின்றிருந்தனர். 

இந்நிலையில் இந்து சமய மதகுரு ஒருவர் வரிசையை குழப்பியபடி சென்று எரிபொருள் பெற முயற்சித்துள்ளார். இதனையடுத்து அவரை கடுமையாக பேசிய பொதுமக்கள் வரிசையில் நின்று வருமாறு எச்சரித்துள்ளனர். 

இந்த சம்பவம் இடம்பெற்று சில நிமிடங்களில் பௌத்த மத குரு ஒருவர் வரிசையை மதிக்காமல் சென்று எரிபொருள் பெற்றுள்ளார். இதன்போது அங்கிருந்த சண்டியர்கள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் எந்தவொரு எதிர்ப்பையும் காட்டாமல் பம்மிக் கொண்டிருந்தனர். 

மேலும் வரிசையில் நிற்காமல் குறிப்பிட்ட ஒரு நேரத்தை தொிவித்து அந்த நேரத்தில் வந்து எரிபொருளை பெறுமாறு அறிவுறுத்தி வழியனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு