யாழ்.சாவகச்சோி வைத்தியசாலையில் ஆண் தாதிக்கும் கொலை அச்சுறுத்தலாம்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.சாவகச்சோி வைத்தியசாலையில் ஆண் தாதிக்கும் கொலை அச்சுறுத்தலாம்..!

யாழ்.சாவகச்சோி ஆதார வைத்தியசாலையில் பணியாற்றும் பெண் தாதி ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்த நிலையில் அதே வைத்தியசாலையில் ஆண் தாதி ஒருவருக்கும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த தாதிய உத்தியோகத்தருக்கு நேற்றைய தினம் புதன்கிழமை தொலைபேசி ஊடாக மிரட்டும் வகையில் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி இருந்ததாகவும், இதனால் தாம் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானதாகவும் கூறி குறித்த ஆண் தாதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு