2ம் வகுப்பு மாணவியை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் கைதான ஆசிரியைக்கு யாழ்.மல்லாகம் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு..

ஆசிரியர் - Editor I
2ம் வகுப்பு மாணவியை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் கைதான ஆசிரியைக்கு யாழ்.மல்லாகம் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு..

யாழ்.சித்தங்கேணி ஸ்ரீ கணேசா வித்தியாலயத்தில் தரம் 2ல் கல்வி கற்கும் மாணவி ஒருவரை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் கைதான ஆசிரியை மல்லாகம் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

கடந்த 10ம் திகதி 2ம் வகுப்பு மாணவியை அடித்து துன்புறுத்திய நிலையில் பாதிக்கப்பட்ட மாணவி யாழ்.போதனா வைத்தியசாலையில் உளநல மருத்துவர்கள் மூலம் ஆற்றுப்படுத்தப்பட்டுள்ளார். 

இந்நிலையில் மருத்துவ அறிக்கையின் அடிப்படையில் ஆசிரியர் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

எனினும் 19ம் திகதி மீண்டும் மன்றில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் பணித்திருக்கின்றது. இதேவேளை சிறுமியின் குடும்பத்தாருக்கு பண உதவி கொடுத்து பாடசாலை நிர்வாகம் நடந்த சம்பவத்தை மூடி மறைக்க முயற்சித்தது. 

இந்நிலையில் சிறுவர் பாதுகாப்பு பிரிவு விடாப்பிடியாக நின்று நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு