யாழ்.கோண்டாவிலில் கட்டட ஒப்பந்தகாரர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் மீட்பு! ஒருவர் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.கோண்டாவிலில் கட்டட ஒப்பந்தகாரர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் மீட்பு! ஒருவர் கைது..

யாழ்.கோண்டாவில் பகுதியில் கட்டட ஒப்பந்தகாரர் ஒருவருடைய வீட்டிலிருந்து திருடப்பட்ட சுமார் 20 லட்சம் ரூபாய் பெறுமதியான கட்டடப் பொருட்களை கோப்பாய் பொலிஸார் மீட்டுள்ளனர்.

கடந்தவாரம் கோண்டாவில் பகுதியில் ஒப்பந்தகாரர் ஒருவரினால் வீடு ஒன்றில்  வேலை செய்யப்பட்டுக் கொண்டிருந்த  வீட்டில் வைக்கப்பட்டிருந்த பெறுமதியான நில மாபிள்கள், 

கழிவறைக்கு  பயன்படுத்தும் மாபிள் உபகரணங்கள் , மின் மோட்டார் மற்றும் மின் வயர்கள் இலத்திரனியல் உபகரணங்கள் உள்ளடங்களாக சுமார் இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டமை தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. 

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் திருடப்பட்ட பொருட்களை மீட்டுள்ளனர். அத்துடன் சந்தேகநபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு